மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
Thursday, 9 January 2020
தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்
சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
3வது சென்னை புத்தகக்காட்சி தொடக்கம் புத்தகக் காட்சி நடத்த அரசு 75 லட்சம் வழங்கும் : முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: அடுத்த ஆண்டில் இருந்து புத்தகக் காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும் என்று 43வது சென்னை புத்தகக்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரி பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பெட்ரோல் 15 காசு, டீசல் 12 காசு விலை அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,10) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.92 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.97 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் விமான விபத்து: ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியாகி இருக்கலாம் என அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்புகிறது.
பசு நல வாரியத்திற்காக நிதி அதிகரிப்பு உ.பி., முதல்வர்
லக்னோ: மாநிலத்தில் பசு நல வாரியத்திற்காக செஸ் வரியை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என வேளாண்துறையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
நிதியமைச்சர் எங்கே? : காங்., கேள்வி
புதுடில்லி ; பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது.
புகையில்லா பொங்கல் : பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை : பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம்: இந்தியாவிலேயே அதிகபட்ச தொகை
ஆமதாபாத்: உரிய ஆவணம் இல்லாததால் காவல்துறையினர் பறிமுதல் செய்த காருக்கு ரூ.27.68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச அபராதம் இது தான்.
குமரி அனந்தன் கோரிக்கை
சென்னை: 'உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் எல்லைக்குள் மதுவுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
பொங்கல் பரிசு வழங்க ரூ 2360 கோடி ஒதுக்கீடு
சென்னை: பல்வேறு திட்டப் பணிகளுக்கு 6580.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நேற்று இரண்டாவது துணை மதிப்பீடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சியில் தரை வழி கேபிள்: அமைச்சர் உறுதி
சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில் படிப்படியாக தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்'' என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க. - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி கத்தக்குறிச்சி ஊராட்சி கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்படும். மெய்யநாதன்: என் தொகுதியில் 20 ஊராட்சிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான் இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தி.மு.க. - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை படிப்படியாக தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க. - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி கத்தக்குறிச்சி ஊராட்சி கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்கப்படும். மெய்யநாதன்: என் தொகுதியில் 20 ஊராட்சிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில் மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான் இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
தி.மு.க. - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.
அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை படிப்படியாக தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதி விருப்பப்படி செலவிட அனுமதி?
சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வன், நேற்று தி.மு.க., வில் இணைந்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க., 14, தி.மு.க., 10, சுயேட்சை 1 என 25 கவுன்சிலர்கள் உள்ளனர்.
காங்., பிழைகளை சரி செய்கிறார் மோடி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு
மதுரை: ''குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. காங்., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரிசெய்து வருகிறார்,'' என, மத்தியபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்
ஓ.பி.எஸ்., மற்றும் ஸ்டாலினுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது
சென்னை: துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்ட, மத்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டோ பாதுகாப்பு, இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெண்ணை காப்பாற்ற உயிர் துறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
சென்னை: ''பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த, இளைஞர் குடும்பத்திற்கு, ௧௦ லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.
குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை, விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.
வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி
சென்னை: ''கன்னியாகுமரி மாவட்டத்தில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
3.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை
சென்னை: ''ஐந்து லட்சம் பேருக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 1.56 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு, பதில் அளித்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
கூவம் நதிக்கரையில் வசிப்போர் மறுகுடியமர்வு: துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்
சென்னை: ''கூவம் நதிக்கரையில் வசிப்போரை, மறு குடியமர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி: முதல்வர் உறுதி
சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை, எம்.எல்.ஏ.,க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு
சென்னை: ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மாநகராட்சியில் தரைவழி கேபிள்: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில், படிப்படியாக, தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
உணவு உற்பத்தியில் புதிய மைல் கல்: முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை
சென்னை: ''தமிழகம், உணவு உற்பத்தியில், ஒரு புதிய மைல் கல்லை எட்டும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக, வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை உயர்த்த கடும் முயற்சி தேவை: பிரதமர் மோடி
புதுடில்லி: பொருளாதார வல்லுனர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்த, முயற்சி எடுக்க வேண்டும்,” என, கேட்டுக்கொண்டார்.
பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் பிளவு! சோனியா கூட்டத்தை புறக்கணிக்கிறார் மம்தா
கோல்கட்டா: மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வன்முறை குறித்தும் விவாதிக்க, வரும், 13ம் தேதி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டில்லியில் முதல்வர் வேட்பாளர் யார்? அறிவிப்பதில் பா.ஜ.,வுக்கு குழப்பம்
பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வருவதால், டில்லி சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், பா.ஜ., தலைமை உள்ளது.
பலாத்கார வழக்குகளில் தண்டனை விதிப்பு 27.7% தான்
புதுடில்லி: நிர்பயா வழக்கில், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, பாலியல் பலாத்கார வழக்குகளில், 27.7 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாக்.,கின் பொய் பிரசாரம் பலிக்காது: காஷ்மீரில் ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 ஆவது சட்டபிரிவின் படி அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்ய வெளிநாட்டு தூதர்கள் 16 பேர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.
Subscribe to:
Comments (Atom)
