Wednesday, 8 January 2020

21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை

துணை மின் நிலையம் அமைக்க இடம் கேட்கிறார் அமைச்சர்

சென்னை: 'துணை மின் நிலையங்கள் அமைக்க, தனியார் இடம் கொடுத்தால், மின் வாரியம் தயாராக உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

'யோகா செய்தால் கோபம் மறையும்': அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ''யோகாசனம் செய்தால், கோபம் மறையும். சென்னை பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, யோகா கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாநில அரசுக்கு உரிமை உள்ளது: மத்திய அரசு விளக்கம்



பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள உரிமை உள்ளது' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

பொது துறை பங்கு விற்பனை அமைச்சரவை குழு ஒப்புதல்

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

காங்., செயற்குழு கூட்டம் டில்லியில் நாளை கூடுகிறது

புதுடில்லி: டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவம், அதை தொடர்ந்து நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், செயற்குழு கூட்டம், நாளை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பட்ஜெட்டுக்கு ஆலோசனை வழங்க மோடி அழைப்பு!

புதுடில்லி : 'வரும், 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 'மைகவ்' இணையதளத்திலும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும் மக்கள் ஆலோசனைகளை வழங்கலாம்' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது: டிரம்ப் உறுதி

வாஷிங்டன் : ஈரான் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் செனட்டில் எப்போது விவாதம்?

வாஷிங்டன்,:அமெரிக்க அதிபர் பதவிக்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தீவிரமாக உள்ளார்.

இரு கட்டங்களாக நடக்கிறது பார்லி .பட்ஜெட் கூட்டத்தொடர்?

புதுடில்லி: பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடத்திட பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிராக போர் :டிரம்ப் ராணுவ அதிகாரத்தை குறைக்க முடிவு

வாஷிங்டன்: ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. 'இதற்கு பழிக்கு பழி வாங்க நேற்று ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படை முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிபர் டிரம்ப், ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை விதித்தார்.

உலகின் மிக உயரமான ரயில் பாலம் டிச.2021ல் முடிக்க இலக்கு

புதுடில்லி : காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ( ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்.) 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின்உயரம் 359 மீட்டர் ஆகும்.

பெட்ரோல் 8 காசு, டீசல் 16 காசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,09) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.77 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.7285காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

16 நாட்டு தூதர்கள் இன்று காஷ்மீர் வருகை

புதுடில்லி; 16-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாட்டு தூதர்கள் கொண்ட குழுவினர் இன்று ஜம்மு-காஷ்மீர் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி.,அந்தஸ்து:பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு

புதுடில்லி: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு எஸ்.சி. எனப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாக்தாத்தின் அதிபாதுகாப்பு பகுதியில் ராக்கெட் தாக்குதல்

பாக்தாத் : தெஹ்ரானில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்தில், ஈரான் தலைநகர் பாக்தாத்தில் க்ரீன் ஜோன் (Green zone)எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியே ஸ்டிரைக் : மம்தா விளாசல்

கோல்கட்டா : அரசியல் இருப்பு இல்லாதவர்கள் ஸ்டிரைக் நடத்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

பெல் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளை விற்க ஒப்புதல்


புதுடில்லி: பெல் நிறுவனம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

100 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்; நிறுவனங்களுக்கு அழைப்பு


புதுடில்லி: நாடு முழுவதும் 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு 'நிடி ஆயோக்' அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது: டிரம்ப் உறுதி

வாஷிங்டன் : ஈரான் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.