டெஹ்ரான் : வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அரசு ரத்து செய்து அதிரடி நடவிடக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்து கொண்டது. அதிலிருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து பொருளாதார தடையையும் விதித்தார்.

இந்நிலையில் டெஹ்ரானில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வதாக ஈரான் அரசு அறிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது : 2015ல் வல்லரசு நாடுகளுடனான ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படிய போவதில்லை. ஈரான் அரசு இதனை முழுமையாக ரத்து செய்துள்ளது. இனிமேல், ஈரானின் அணுசக்தி திட்டம் அதன் சொந்த தொழில்நுட்ப தேவைகளின் அடிப்படையில் முன்னேறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கைவிட வேண்டுகோள்
தொடர்ந்து, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளின் பிரதமர்களும் கலந்தாலோசித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை ஈரான் கைவிட வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தை குறைக்க நாங்கள் இயன்றதை செய்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
